• Jun 18 2025

இஸ்ரேல் - ஈரானிலுள்ள இலங்கையர்களை மீட்பது கடினம்...!

shanuja / Jun 17th 2025, 6:27 pm
image


இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கயர்களை மீட்பது கடினமானது என்றும் இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 


இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் இலங்கையர்கள் நால்வர் காயமடைந்துள்ளமை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றுகையிலே  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 


தொழிலுக்குச் சென்றுள்ள 4 இலங்கையர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அதில் 3 பேர் பெண்கள் ஒருவர் ஆண். காயமைடைந்த இலங்கையர்களுக்கு  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலில் உள்ள தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலில் 20000 க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். ஈரானில் 35 பேர் உள்ளனர்.அவர்களுள் 8 பேர் ஈரானியர்களுடன் திருமணம் புரிந்துள்ளவர்கள். மாணவர்கள் சிலர், ஏனையவர்கள் தொழில் செய்கின்றவர்கள். 


தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்களில் இருநாடுகளிலும் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தற்போது மோசமான நிலை காணப்படுகின்றது.எனினும் தூதரகம் தேவையான நடவடிக்கைகளைச் செய்துள்ளது. ஈரானிலுள்ள தூதுவராலயத்தை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. ஆயினும் அங்கிருக்கும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தூதுரகத்தில் வருகை தந்த இலங்கை மாணவர்கள் 8 பேரும் பாதுகாப்பாக ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் பலர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் உள்ளோரது நிலை தான் மோசமான நிலையில் உள்ளது. அதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் வழங்குமாறு அறிவித்திருக்கின்றோம். 


தாக்குதல் இடம்பெறுவது குறித்து முன்னெச்சரிக்கை விடுப்போம். அவர்கள் அதற்கேற்றவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலத்திற்குக் கீழுள்ள கட்டடத் தொகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு நாம் அறிவித்துள்ளோம். தற்போது இஸ்ரேலுக்குச் செல்ல இருப்பவர்களை அங்கு செல்ல அனுமதிக்காது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். 


தொழில் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் நாம் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்புபட்டிருக்கின்றோம். அவர்களுடைய விசா காலத்தை நீடிக்குமாறும் அறிவித்துள்ளோம். இஸ்ரேல் - ஈரானிலுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினமானதாகவுள்ளது.


எனினும் வாகனங்கள் மூலம் அயல் நாடுகளில் சென்று தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். துருக்கியிலுள்ள தூதுவரகங்கள் ஊடாக ஈரானிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அயல் நாடுகளின் உதவியுடன் அவர்களை மீட்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். - என்றார்.

இஸ்ரேல் - ஈரானிலுள்ள இலங்கையர்களை மீட்பது கடினம். இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கயர்களை மீட்பது கடினமானது என்றும் இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் இலங்கையர்கள் நால்வர் காயமடைந்துள்ளமை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றுகையிலே  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தொழிலுக்குச் சென்றுள்ள 4 இலங்கையர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அதில் 3 பேர் பெண்கள் ஒருவர் ஆண். காயமைடைந்த இலங்கையர்களுக்கு  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலில் உள்ள தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலில் 20000 க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள். ஈரானில் 35 பேர் உள்ளனர்.அவர்களுள் 8 பேர் ஈரானியர்களுடன் திருமணம் புரிந்துள்ளவர்கள். மாணவர்கள் சிலர், ஏனையவர்கள் தொழில் செய்கின்றவர்கள். தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்களில் இருநாடுகளிலும் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தற்போது மோசமான நிலை காணப்படுகின்றது.எனினும் தூதரகம் தேவையான நடவடிக்கைகளைச் செய்துள்ளது. ஈரானிலுள்ள தூதுவராலயத்தை தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. ஆயினும் அங்கிருக்கும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தூதுரகத்தில் வருகை தந்த இலங்கை மாணவர்கள் 8 பேரும் பாதுகாப்பாக ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் உள்ளோரது நிலை தான் மோசமான நிலையில் உள்ளது. அதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் வழங்குமாறு அறிவித்திருக்கின்றோம். தாக்குதல் இடம்பெறுவது குறித்து முன்னெச்சரிக்கை விடுப்போம். அவர்கள் அதற்கேற்றவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலத்திற்குக் கீழுள்ள கட்டடத் தொகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு நாம் அறிவித்துள்ளோம். தற்போது இஸ்ரேலுக்குச் செல்ல இருப்பவர்களை அங்கு செல்ல அனுமதிக்காது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தொழில் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் நாம் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்புபட்டிருக்கின்றோம். அவர்களுடைய விசா காலத்தை நீடிக்குமாறும் அறிவித்துள்ளோம். இஸ்ரேல் - ஈரானிலுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினமானதாகவுள்ளது.எனினும் வாகனங்கள் மூலம் அயல் நாடுகளில் சென்று தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். துருக்கியிலுள்ள தூதுவரகங்கள் ஊடாக ஈரானிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அயல் நாடுகளின் உதவியுடன் அவர்களை மீட்பதற்கும் நடவடிக்கை எடுப்போம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement