• May 23 2026

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

Chithra / Sep 15th 2025, 9:30 am
image

 

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கமும் பிற தொழிற்சங்கங்களும் கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்திருந்தன.

அதன்படி, முதல் கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 4 ஆம் திகதி வேலைநிறுத்தம் தொடங்கி 11 நாட்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் இதுவரை தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பேச்சுவார்த்தையை கூட நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெறும் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கமும் பிற தொழிற்சங்கங்களும் கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்திருந்தன.அதன்படி, முதல் கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.கடந்த 4 ஆம் திகதி வேலைநிறுத்தம் தொடங்கி 11 நாட்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் இதுவரை தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பேச்சுவார்த்தையை கூட நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.இன்று பிற்பகல் நடைபெறும் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement