மட்டக்களப்பு - எருவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (03) இடம்பெற்றது.
எருவில் பெத்தான்குடி மக்களால் ஆலயத் தலைவர் சா.பேரின்பநாயகம் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் எருவில் கிராமத்திலிருந்து மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும், சமூகசேவையாளரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள அ.வசீகரன் உள்ளிட்ட பலர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.
நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் க.புவனேந்திரநாதன், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்விப்பணிப்பாளர் செ.சுரேஸ், அதிபர் சி.தீபதர்சன் மற்றும் கண்ணகை அம்பாள் ஆலய பரிபான சபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கல்வியில் சிறந்து விளங்கியோருக்கு கௌரவிப்பு. மட்டக்களப்பு - எருவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (03) இடம்பெற்றது. எருவில் பெத்தான்குடி மக்களால் ஆலயத் தலைவர் சா.பேரின்பநாயகம் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் எருவில் கிராமத்திலிருந்து மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும், சமூகசேவையாளரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள அ.வசீகரன் உள்ளிட்ட பலர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன. நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் க.புவனேந்திரநாதன், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவி கல்விப்பணிப்பாளர் செ.சுரேஸ், அதிபர் சி.தீபதர்சன் மற்றும் கண்ணகை அம்பாள் ஆலய பரிபான சபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.