• Aug 19 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் அதிரடிக் கைது!

Chithra / Aug 19th 2025, 8:24 am
image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று  காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் அதிரடிக் கைது தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று  காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement