• May 21 2024

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுங்கள்...! எம்.எம்.மஹ்தி கோரிக்கை...!

Sharmi / Apr 30th 2024, 2:09 pm
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 5 வருடங்கள் கழிந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

270 பேர் கொல்லப்படுவதற்கும் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஊப்படுத்துவதற்கும், கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்படுவதற்கும், இன முறுகளை ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாத பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை ஏன் சேவையில் வைத்துள்ளீர்கள்? அவர்களுக்கு ஏன் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குகின்றீர்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இத் தாக்குதலின்  காரணமாக எந்த சம்மந்தமும் இன்றி முஸ்லிம்களும் கத்தோலிக்க கிறிஸ்தவ அப்பாவிகளுமே பாதிக்கப்பட்டார்கள்.

நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாத அதிகாரிகள் அரச பணிக்கே தகுதி அற்றவர்களாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் துறையினர் போன்ற அனைவரையும் ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது ஜனாதிபதியும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுங்கள். எம்.எம்.மஹ்தி கோரிக்கை. ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 5 வருடங்கள் கழிந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம் மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,270 பேர் கொல்லப்படுவதற்கும் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஊனப்படுத்துவதற்கும், கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்படுவதற்கும், இன முறுகளை ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்த ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியாத பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை ஏன் சேவையில் வைத்துள்ளீர்கள் அவர்களுக்கு ஏன் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குகின்றீர்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.இத் தாக்குதலின்  காரணமாக எந்த சம்மந்தமும் இன்றி முஸ்லிம்களும் கத்தோலிக்க கிறிஸ்தவ அப்பாவிகளுமே பாதிக்கப்பட்டார்கள்.நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க முடியாத அதிகாரிகள் அரச பணிக்கே தகுதி அற்றவர்களாகும்.எனவே, சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் துறையினர் போன்ற அனைவரையும் ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது ஜனாதிபதியும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement