தாய் மொழி ஆசிரியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்றையதினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்ற நிலையில், பொலிசார் ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல் வாசலில் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரை மட்டும் உள்ளே சென்று ஆளுநருடன் பேசலாம் என தெரிவித்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரை சந்திப்பதற்காக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வடமாகாண ஆளுநர் வேதநாயகனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஜகர் ஒன்றை கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
யாழில் இருந்து வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் சேவையை செய்தவர்கள் மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு பணி இட மாற்றம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தமது வெளி மாவட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும்.
வெளிமாவட்டம் செல்லாது பல ஆசிரியர்கள் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றி வரும் நிலையில் பாரபட்ச இன்றி இடமாற்றங்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்திருக்கிறோம்.
குறித் விடயங்கள் தொடர்பில் சாதகமாக பரிசீலனை செய்து விரைவில் அறிவிப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக தெரிவித்தனர்.
வெளி மாகாணத்தில் சேவையாற்றிய ஆசிரியர்களை வெளி மாவட்டம் அனுப்பாதீர்கள் - தாய் மொழி ஆசிரியர் சங்கம் போராட்டம் தாய் மொழி ஆசிரியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்றையதினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்ற நிலையில், பொலிசார் ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல் வாசலில் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரை மட்டும் உள்ளே சென்று ஆளுநருடன் பேசலாம் என தெரிவித்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரை சந்திப்பதற்காக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வடமாகாண ஆளுநர் வேதநாயகனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஜகர் ஒன்றை கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர். யாழில் இருந்து வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் சேவையை செய்தவர்கள் மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு பணி இட மாற்றம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தமது வெளி மாவட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். வெளிமாவட்டம் செல்லாது பல ஆசிரியர்கள் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றி வரும் நிலையில் பாரபட்ச இன்றி இடமாற்றங்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்திருக்கிறோம்.குறித் விடயங்கள் தொடர்பில் சாதகமாக பரிசீலனை செய்து விரைவில் அறிவிப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக தெரிவித்தனர்.