பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மட்டக்களப்பு கல்லடி வேலூரில் அமைந்துள்ள கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று (28) திறந்து வைத்துள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் இயங்கி வருகின்றது.
இந்நிலையத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வகையில் கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் எஸ்.ஜசிந்தன், மாவட்ட முகாமையாளர் ரீ.விஜயன், கைப்பணி ஆசிரியர் ராஜேந்திரம் மலர்தேவி, கிராமசேவகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்தி சபையினால் கைப்பணி பயிற்சி நிறைவு செய்த செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் ,தொழில் உபகரணங்களும் பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை பெருந்தோட்ட பிரதி அமைச்சர் திறந்துவைப்பு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மட்டக்களப்பு கல்லடி வேலூரில் அமைந்துள்ள கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று (28) திறந்து வைத்துள்ளார்.பனை அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் இயங்கி வருகின்றது.இந்நிலையத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வகையில் கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் எஸ்.ஜசிந்தன், மாவட்ட முகாமையாளர் ரீ.விஜயன், கைப்பணி ஆசிரியர் ராஜேந்திரம் மலர்தேவி, கிராமசேவகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்தி சபையினால் கைப்பணி பயிற்சி நிறைவு செய்த செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் ,தொழில் உபகரணங்களும் பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.