முச்சக்கர வண்டி துறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமடைந்து வருவதால் பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கத்தின் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பு அதன் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தலைமையில் இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது, முச்சக்கர வண்டித் துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
முச்சக்கர வண்டிகளை முறைப்படுத்தும் செயல்முறை மிகவும் மந்தமாக இடம்பெற்று வருவதாக எல். ரோஹண பெரேரா குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக பயணிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் மற்றும் தர்க்கங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், முறைப்படுத்தல் நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை குறைப்பு அல்லது எரிபொருள் தொடர்பான நிவாரணங்களின் பயன்கள் பொதுமக்களை முறையாக சென்றடைய வேண்டுமெனில், முச்சக்கர வண்டித் துறை முதலில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான இளம் சாரதிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டிய அவர், வயது வரம்பை அதிகரிப்பதற்குப் பதிலாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.
இதனிடையே, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் எல். ரோஹண பெரேரா குற்றம் சாட்டினார்.
இதனால் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர், பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்படி, முச்சக்கர வண்டி முறைப்படுத்தல் செயல்முறையை துரிதப்படுத்துதல், எரிபொருள் விலை குறைப்பின் பயன்களை பயணிகளுக்கு முறையாக வழங்குதல், குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவை கைவிடுதல் மற்றும் பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்கம் முன்வைத்துள்ளது.
வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம்; முச்சக்கர வண்டித் துறையை சீரழிக்கும் நடவடிக்கை - கொதித்தெழும் சங்கம் முச்சக்கர வண்டி துறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமடைந்து வருவதால் பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கத்தின் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பு அதன் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தலைமையில் இன்று (05) கொழும்பில் இடம்பெற்றது.இதன்போது, முச்சக்கர வண்டித் துறை எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.முச்சக்கர வண்டிகளை முறைப்படுத்தும் செயல்முறை மிகவும் மந்தமாக இடம்பெற்று வருவதாக எல். ரோஹண பெரேரா குற்றம் சாட்டினார்.இதன் காரணமாக பயணிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் மற்றும் தர்க்கங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், முறைப்படுத்தல் நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை குறைப்பு அல்லது எரிபொருள் தொடர்பான நிவாரணங்களின் பயன்கள் பொதுமக்களை முறையாக சென்றடைய வேண்டுமெனில், முச்சக்கர வண்டித் துறை முதலில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதேவேளை, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான இளம் சாரதிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டிய அவர், வயது வரம்பை அதிகரிப்பதற்குப் பதிலாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.இதனிடையே, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் எல். ரோஹண பெரேரா குற்றம் சாட்டினார்.இதனால் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர், பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.இதன்படி, முச்சக்கர வண்டி முறைப்படுத்தல் செயல்முறையை துரிதப்படுத்துதல், எரிபொருள் விலை குறைப்பின் பயன்களை பயணிகளுக்கு முறையாக வழங்குதல், குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவை கைவிடுதல் மற்றும் பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்கம் முன்வைத்துள்ளது.