மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன என்பவரின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் இல் நீதிவான் வசந்த அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
விசாரணையின் போது, மரணமடைந்தவரின் உடலிலிருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுவதற்கு அனுமதி கோரப்பட்டது.
மேலும், உயிரிழந்தவரின் கைப்பேசியில் முக அடையாள பாதுகாப்பு (Face ID) பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதனைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், கைப்பேசியை தயாரித்த நிறுவனம் அல்லது தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்து அதிலுள்ள தரவுகளைப் பெற தேவையான நீதிமன்ற உத்தரவை வழங்குமாறும் கோரப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட, உயிரிழந்தவரின் கழுத்தில் இருந்த பட்டி அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என நீதிவான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொலிஸார், குறித்த பொருள் வழக்குப்பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அது பகுப்பாய்விற்காக ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதேபோன்று சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில மருந்துகள் மற்றும் இனந்தெரியாத மருந்துத் துண்டுகள் தொடர்பாகவும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.
அவை மரண பரிசோதனை நடத்திய மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் நகர்த்தல் பத்திரம் மூலம் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலதிக சாட்சியப் பதிவுகளுக்காக வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் உத்தரவு மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன என்பவரின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் இல் நீதிவான் வசந்த அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.இதன்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.விசாரணையின் போது, மரணமடைந்தவரின் உடலிலிருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுவதற்கு அனுமதி கோரப்பட்டது.மேலும், உயிரிழந்தவரின் கைப்பேசியில் முக அடையாள பாதுகாப்பு (Face ID) பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதனைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், கைப்பேசியை தயாரித்த நிறுவனம் அல்லது தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்து அதிலுள்ள தரவுகளைப் பெற தேவையான நீதிமன்ற உத்தரவை வழங்குமாறும் கோரப்பட்டது.சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட, உயிரிழந்தவரின் கழுத்தில் இருந்த பட்டி அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என நீதிவான் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த பொலிஸார், குறித்த பொருள் வழக்குப்பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அது பகுப்பாய்விற்காக ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.அதேபோன்று சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில மருந்துகள் மற்றும் இனந்தெரியாத மருந்துத் துண்டுகள் தொடர்பாகவும் நீதிவான் கேள்வி எழுப்பினார்.அவை மரண பரிசோதனை நடத்திய மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் நகர்த்தல் பத்திரம் மூலம் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாரின் கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதனையடுத்து, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலதிக சாட்சியப் பதிவுகளுக்காக வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.