• Jun 23 2025

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை வேண்டும் - தமிழரசு கட்சி வலியுறுத்தல்!

Thansita / Jun 22nd 2025, 4:12 pm
image

செம்மணி புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும்,ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலுசேர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல்,ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயங்களோ,படுகொலைசெய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பான விடயங்களோ வெளியில் கொண்டுவரமுடியாத கையறுநிலையில் அரசுகள் காணப்படுகின்றன.

இது தொடர்பான விசாரணைகள் சர்வதேச ரீதியில் நடைபெற்றால்தான் உண்மைகள் வெளியில்வரகூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு,செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வின்போது 19 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.கண்டெடுக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளின் எழும்புக்கூடுகளும் அடையாளம்காணப்பட்டுள்ளது.கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 16வருடங்களை கடந்துள்ள நிலையில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையென்றது தொடர்கதையாவுள்ளது.தமிழர்கள வயதுவேறுபாடுகள் இல்லாமல்; கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது இதனையே நாங்கள் இனப்படுகொலை என்கின்றோம். இதனடிப்படையில் தற்போது இளம்தலைமுறையினைக்;கொண்ட அமைப்பானது இந்த விடயத்தினை சர்வதேசத்தி;ன முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும்,மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செம்மணி வளைவு உள்ள பகுதியில் எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் அணையாத தீபம் என்ற கருப்பொருளில் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.

இது மனித உரிமை மீறலோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இப்படியான பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு தீர்வைக் காணவேண்டும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதைகுழிகள் அகழப்படும்போதுதான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் மக்கள் செயல் எனச்சொல்லப்படுகின்ற இளையோர் தன்னார்வ அமைப்பானது 23,24,25ஆம் திகதிகளில் இந்தச் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கிய தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் இந்த ஜனநாயக ரீதியான மனிதவுரிமைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அணையாத தீபம் என்ற இந்தப் போராட்டமானது எங்களுடைய விடுதலைத் தாகம் அணையாமல் இருந்துகொண்டிருக்கின்றது, மனிதவுரிமை சம்பந்தமான விடயங்களில் நீதி தேடுகின்ற விடயமும் அணையாத தீபமாக எங்களுடைய மனங்களில் இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மனிதவுரிமைபேரவையின் ஆணையாளர் வோல்கர் டக்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். பல தடுப்புகளுக்கு மத்தியில் அவர் இங்;கு வரவிருக்கின்றார். அந்த வேளையில் இப்படியான மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்காத விடயங்கள் சம்பந்தமாக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் இருக்கின்றபோது வடக்கு கிழக்கு என்றில்லாமல் பாதிக்கப்பட்ட உறவுகள், மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். மனிதாபிமானம் மிக்கவர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மொழி வேறுபாடில்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.

செம்மணியில் நடைபெறவுள்ள இந்த முன்று தினங்கள் கவனயீர்ப்பு போராட்டம் இல்லது சர்வதேசத்தின் மத்தியில் இந்;த அநியாயங்களை கொண்டு செல்கின்ற இந்த போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும்.

கிருஷாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வேளையில் அது சம்பந்;;தமான விசாரணை நடைபெற்றபோது சோமரத்ன ராஜபக்ச என்ற கோப்ரல் அந்தப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட கொலையாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் விசாரணையின்போது குறிப்பிட்ட ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். செம்மணிப் புதைகுழியில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள், அந்தக் கொலைகளை செய்த இராணுவ வீரர்கள் யார் என்பதையும் அவர் அந்த இடத்தில் குறிப்பிட்டிருந்தார். கப்டன் துடுக்கல என்ற பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான சாட்சியங்களை அவர்கள் அப்படியே மூடிமறைத்து விட்டார்கள்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்ணை அகழ்கின்றபோது எலும்புக்கூடுகள் வந்துகொண்டிருக்கின்றபடியால் இதற்குரிய சர்வதேச நீதி வேண்டும். சர்வதேச மேற்பார்வையில் இந்தப் புதைகுழிகள் அகழப்படவேண்டும். இந்த முக்கியமான போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் வலு சேர்க்க வேண்டும்.

பூரணமான உதவியை வழங்க வேண்டும். இளையோர் அமைப்பு நமக்காக செய்கின்ற இந்த அணையாத தீபம் என்ற போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் அணையாமல் ஒதுங்காமல் பங்குகொள்ள வேண்டும்.

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை வேண்டும் - தமிழரசு கட்சி வலியுறுத்தல் செம்மணி புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும்,ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலுசேர்க்க வேண்டும்.தமிழ் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல்,ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயங்களோ,படுகொலைசெய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பான விடயங்களோ வெளியில் கொண்டுவரமுடியாத கையறுநிலையில் அரசுகள் காணப்படுகின்றன.இது தொடர்பான விசாரணைகள் சர்வதேச ரீதியில் நடைபெற்றால்தான் உண்மைகள் வெளியில்வரகூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு,செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வின்போது 19 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.கண்டெடுக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளின் எழும்புக்கூடுகளும் அடையாளம்காணப்பட்டுள்ளது.கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.யுத்தம் முடிவடைந்து 16வருடங்களை கடந்துள்ள நிலையில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையென்றது தொடர்கதையாவுள்ளது.தமிழர்கள வயதுவேறுபாடுகள் இல்லாமல்; கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது இதனையே நாங்கள் இனப்படுகொலை என்கின்றோம். இதனடிப்படையில் தற்போது இளம்தலைமுறையினைக்;கொண்ட அமைப்பானது இந்த விடயத்தினை சர்வதேசத்தி;ன முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும்,மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செம்மணி வளைவு உள்ள பகுதியில் எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் அணையாத தீபம் என்ற கருப்பொருளில் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள். இது மனித உரிமை மீறலோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இப்படியான பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு தீர்வைக் காணவேண்டும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதைகுழிகள் அகழப்படும்போதுதான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் மக்கள் செயல் எனச்சொல்லப்படுகின்ற இளையோர் தன்னார்வ அமைப்பானது 23,24,25ஆம் திகதிகளில் இந்தச் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கிய தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் இந்த ஜனநாயக ரீதியான மனிதவுரிமைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.அணையாத தீபம் என்ற இந்தப் போராட்டமானது எங்களுடைய விடுதலைத் தாகம் அணையாமல் இருந்துகொண்டிருக்கின்றது, மனிதவுரிமை சம்பந்தமான விடயங்களில் நீதி தேடுகின்ற விடயமும் அணையாத தீபமாக எங்களுடைய மனங்களில் இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.மனிதவுரிமைபேரவையின் ஆணையாளர் வோல்கர் டக்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். பல தடுப்புகளுக்கு மத்தியில் அவர் இங்;கு வரவிருக்கின்றார். அந்த வேளையில் இப்படியான மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்காத விடயங்கள் சம்பந்தமாக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் இருக்கின்றபோது வடக்கு கிழக்கு என்றில்லாமல் பாதிக்கப்பட்ட உறவுகள், மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும். மனிதாபிமானம் மிக்கவர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மொழி வேறுபாடில்லாமல் கலந்துகொள்ள வேண்டும்.செம்மணியில் நடைபெறவுள்ள இந்த முன்று தினங்கள் கவனயீர்ப்பு போராட்டம் இல்லது சர்வதேசத்தின் மத்தியில் இந்;த அநியாயங்களை கொண்டு செல்கின்ற இந்த போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும்.கிருஷாந்தி என்ற பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வேளையில் அது சம்பந்;;தமான விசாரணை நடைபெற்றபோது சோமரத்ன ராஜபக்ச என்ற கோப்ரல் அந்தப் படுகொலையோடு சம்பந்தப்பட்ட கொலையாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விசாரணையின்போது குறிப்பிட்ட ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். செம்மணிப் புதைகுழியில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள், அந்தக் கொலைகளை செய்த இராணுவ வீரர்கள் யார் என்பதையும் அவர் அந்த இடத்தில் குறிப்பிட்டிருந்தார். கப்டன் துடுக்கல என்ற பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான சாட்சியங்களை அவர்கள் அப்படியே மூடிமறைத்து விட்டார்கள்.இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்ணை அகழ்கின்றபோது எலும்புக்கூடுகள் வந்துகொண்டிருக்கின்றபடியால் இதற்குரிய சர்வதேச நீதி வேண்டும். சர்வதேச மேற்பார்வையில் இந்தப் புதைகுழிகள் அகழப்படவேண்டும். இந்த முக்கியமான போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் வலு சேர்க்க வேண்டும். பூரணமான உதவியை வழங்க வேண்டும். இளையோர் அமைப்பு நமக்காக செய்கின்ற இந்த அணையாத தீபம் என்ற போராட்டத்திற்கு நாங்கள் அனைவரும் அணையாமல் ஒதுங்காமல் பங்குகொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement