நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 75,500 வேட்பாளர்களில், 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி, குறித்த தேர்தல் செலவு அறிக்கைகளைப் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் செலவு அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைகளைக் குறித்த தினத்திலிருந்து ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்- தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட 75,500 வேட்பாளர்களில், 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுச் சட்டத்தின் பிரிவு 7 இன் படி, குறித்த தேர்தல் செலவு அறிக்கைகளைப் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் செலவு அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைகளைக் குறித்த தினத்திலிருந்து ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.