கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் சுமார் 30 கோடி ரூபாய் வென்றிருந்தார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி டெபாசிட்மெக்கேயின் பெயரில் Deposit செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், ஒன்றாக வாழப் போகின்றோம் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் கேம்பல் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்ட நிலையில்
அதன் பின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, காதலியான மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் லாரன்ஸ் கேம்பல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் தகாத உறவில் பார்த்ததாகவும் , அவர் மேலும் தெரிவித்தார். வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை
வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
லாட்டரியில் ரூ.30 கோடி வென்ற காதலன் :பணத்தை சுருட்டிக்கொண்டு வேறொரு ஆணுடன் எஸ்கேப் ஆன காதலி கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் சுமார் 30 கோடி ரூபாய் வென்றிருந்தார். அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி டெபாசிட்மெக்கேயின் பெயரில் Deposit செய்ய ஒப்புக்கொண்டார். இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், ஒன்றாக வாழப் போகின்றோம் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.ஊடகங்கள், லாரன்ஸ் கேம்பல் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்ட நிலையில் அதன் பின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, காதலியான மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் லாரன்ஸ் கேம்பல் குற்றம் சாட்டியுள்ளார். கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் தகாத உறவில் பார்த்ததாகவும் , அவர் மேலும் தெரிவித்தார். வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.