• Aug 22 2026

உழவியந்திர சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! கிளிநொச்சியில் சோகம்

Chithra / Aug 22nd 2026, 7:18 am
image


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.


உறவினரான 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை எடுக்க முற்பட்டபோது, உழவியந்திரத்தின் பெட்டியில் நின்றிருந்த சிறுவன் தவறி கீழே வீழ்ந்துள்ளார்.


இதன்போது உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி நசுங்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உழவியந்திர சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு கிளிநொச்சியில் சோகம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மூன்றாம் யூனிற் பகுதியில் உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.உறவினரான 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை எடுக்க முற்பட்டபோது, உழவியந்திரத்தின் பெட்டியில் நின்றிருந்த சிறுவன் தவறி கீழே வீழ்ந்துள்ளார்.இதன்போது உழவியந்திரத்தின் சில்லில் சிக்கி நசுங்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement