• Sep 14 2025

ஆற்றிலிருந்து சடலம் மீட்பு! கொலையா? விபத்தா? பொலிஸார் விசாரணை!

shanuja / Sep 13th 2025, 12:33 pm
image

ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். 


சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.  


55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 04 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


இது கொலையா அல்லது விபத்தா என்ற போர்வையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றிலிருந்து சடலம் மீட்பு கொலையா விபத்தா பொலிஸார் விசாரணை ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.  55 முதல் 60 வயது மதிக்கத்தக்க 5 அடி 04 அங்குலம் உயரமுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இது கொலையா அல்லது விபத்தா என்ற போர்வையில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement