சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
வெவ்வேறு ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக 400, 500 சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலபேர் வேறு வருமானங்களைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பல்வேறு சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு சம்பளத்தைச் செலுத்த வேண்டியிருப்பதாகவும், இவ்வாறு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிலர் தனியார் பஸ்களில் சாரதிகளாகப் பணியாற்றி வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறுமாறும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அத்துடன், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாக இத்துறையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை மற்றும் புகையிரத திணைக்களத்தை வினைத்திறனான மற்றும் திருப்திகரமான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுதல் தொடர்பான உபகுழுவின் இடைக்கால அறிக்கை என்பனவும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருடைய கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இது குறித்து விசாரித்த குழுத் தலைவர், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஒழுக்காற்றுப் பிரச்சினைகளால் சுமார் 500 சாரதிகள் பணியிடை நீக்கம் சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. வெவ்வேறு ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக 400, 500 சாரதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலபேர் வேறு வருமானங்களைப் பெற்று வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பல்வேறு சட்ட ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் அவர்களுக்கு சம்பளத்தைச் செலுத்த வேண்டியிருப்பதாகவும், இவ்வாறு பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிலர் தனியார் பஸ்களில் சாரதிகளாகப் பணியாற்றி வருமானத்தை ஈட்டி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறுமாறும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாக இத்துறையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுவின் அறிக்கை மற்றும் புகையிரத திணைக்களத்தை வினைத்திறனான மற்றும் திருப்திகரமான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுதல் தொடர்பான உபகுழுவின் இடைக்கால அறிக்கை என்பனவும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருடைய கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இது குறித்து விசாரித்த குழுத் தலைவர், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.