• May 22 2026

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமலுக்கு உத்தரவு

Chithra / May 21st 2026, 7:23 pm
image

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமலுக்கு உத்தரவு நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement