• Jun 27 2025

மோட்டார் சைக்கிளும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் அதிதீவிர சிகிச்சையில்!

Chithra / Jun 27th 2025, 7:57 am
image


திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று மருத்துவமனை வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர், நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.

குறித்த நபர்  தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்

கெங்கையிலிருந்து மணல் ஏற்றிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் தினமும் நடுஊற்று வீதி வழியாக அதிவேகமாக செல்வதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலமுறை மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, அழுத்தங்களும் ஏற்படுத்தியிருந்தாலும், இவ் வீதியில் டிப்பர்கள் அதிவேகமாக பயணிப்பது தொடர்ந்தும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

இந்த வீதியானது பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பாதுகாப்பற்ற பாதையாக இருப்பதால்,  பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகள், டிப்பர் அனுமதி வழங்கும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மோட்டார் சைக்கிளும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் அதிதீவிர சிகிச்சையில் திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று மருத்துவமனை வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர், நடுஊற்று பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.குறித்த நபர்  தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்கெங்கையிலிருந்து மணல் ஏற்றிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் தினமும் நடுஊற்று வீதி வழியாக அதிவேகமாக செல்வதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பலமுறை மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து, அழுத்தங்களும் ஏற்படுத்தியிருந்தாலும், இவ் வீதியில் டிப்பர்கள் அதிவேகமாக பயணிப்பது தொடர்ந்தும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.இந்த வீதியானது பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பாதுகாப்பற்ற பாதையாக இருப்பதால்,  பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்து அதிகாரிகள், டிப்பர் அனுமதி வழங்கும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, பாதுகாப்பற்ற வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement