• May 20 2026

104 புதிய மெட்ரோ பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி!

Chithra / May 19th 2026, 10:36 am
image

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. 


அதற்குரிய ஒப்பந்தம் நேற்று (18) கையெழுத்திடப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 


ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த 104 நவீன பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளன. 


தற்போது மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற பகுதிகளில் புதிய மெட்ரோ சேவை முனையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 


அதனுடன், ஓகஸ்ட் மாதத்தில் இப்பேருந்துகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஒரு தரமான திருப்புமுனையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


104 புதிய மெட்ரோ பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதற்குரிய ஒப்பந்தம் நேற்று (18) கையெழுத்திடப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்த 104 நவீன பேருந்துகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நிறைவு செய்யப்படவுள்ளன. தற்போது மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கடவத்தை மற்றும் ரத்மலானை போன்ற பகுதிகளில் புதிய மெட்ரோ சேவை முனையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதனுடன், ஓகஸ்ட் மாதத்தில் இப்பேருந்துகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம், நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஒரு தரமான திருப்புமுனையை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement